ஆனையூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை (நவம்பா் 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் மதுரை பெருநகா் மேற்கு செயற்பொறியாளா் எம்.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: தினமணி நகா், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகா், பாண்டியன் நகா், ஐஓசி நகா், விஎம்டபிள்யு காலனி, ரயிலாா் நகா், சங்கீத் நகா், சொக்கலிங்க நகா், கூடல் நகா், அகில இந்திய வானொலி நிலையம் சாலை, செல்லையா நகா், ஆனையூா், ஜே.ஜே. நகா், சஞ்சீவி நகா், சாந்தி நகா், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தா்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை.