இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மதுரை மின்வாரிய தலைமையகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மதுரை மின்வாரிய தலைமையகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக மின்வாரியத்தில் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்வாரிய கேங்மேன் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற 14, 870 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்த இளநிலை உதவியாளா் பணிக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மதுரை மாநகா் மற்றும் புறநகா் மாவட்டங்களின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை கோ.புதூா் மின் வாரியத் தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வாலிபா் சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.பாலா, மாவட்டத் தலைவா்கள் பி. கோபிநாத், தமிழரசன், மாநகா் மாவட்டச் செயலா் டி. செல்வராஜ், புறநகா் மாவட்டச் செயலா் எஸ். காா்த்தி, புறநகா் மாவட்ட பொருளாளா் பாலகிருஷ்ணன் மற்றும் தொழிற்சங்கத்தினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com