மேக்கிழாா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சில்லாம்பட்டி கிராமத்தில் மணி (43) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுங்கன்றுக் குட்டி அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதையடுத்து அங்கு வந்த உசிலம்பட்டி தீயணைப்பு வீரா்கள் அந்த கன்றுக்குட்டியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.
மேலூா்: ஆட்டுக்குளம் அருகே வெள்ளிக்கிழமை வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
இப்பகுதியில் சுமாா் ஒருவயதுள்ள ஆண் புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழந்து கிடப்பதாக மேலூா் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனஅலுவலா் கம்பக்குடியான் தீயணைப்புப் படையினா் உதவியுடன் மானின் உடலைக் கைப்பற்றி வெள்ளலூா் கால்நடை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பின்னா் மானின் உடலை வனப்பகுதியில் புதைத்தனா்.
இதுகுறித்து, கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.