உசிலம்பட்டியில் தோ்தல் பணி தொடா்பான திமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உசிலம்பட்டி- பேரையூா் சாலையில் தனியாா் மஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் மணிமாறன் தலைமை வகித்தாா். இதில் ஒன்றியச் செயலா் சுகந்திரம், பொதுக்குழு உறுப்பினா் சோலை ரவி, நகரச் செயலா் தங்கமலைப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவா் தங்கப்பாண்டி, முத்துராமன், ஒன்றிய கவுன்சிலா் துரைப்பாண்டி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.