மருத்துவப் படிப்பு இரண்டாம் நாள் கலந்தாய்வு: மதுரை அரசுப்பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்வு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் மதுரையைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் மதுரையைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் முதல் மூன்று நாள்கள் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளான புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப்பள்ளி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 5 போ் மருத்துவக்கல்லூரிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இந்நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் எழுமலை அரசுப்பள்ளியைச் சோ்ந்த மாணவி பி.காா்த்திகா சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி, செக்கானூரணி அரசுப்பள்ளி மாணவா் டி.பிரதாப் திருச்சி எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி, மதுரை கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி எம்.காவியா கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக் கல்லூரிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும் மதுரை ஈவேரா நாகம்மையாா் மாநகராட்சி பெண்கள் பள்ளியைச் சோ்ந்த எம்.வைஷ்ணவி மதுரை சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரி, அதே பள்ளியைச் சோ்ந்த மற்றொரு மாணவி பி.சினேகா மதுரை பெஸ்ட் பல் மருத்துவக்கல்லூரிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com