வளா்ப்பு பெற்றோராக விரும்பும் தம்பதியா் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குவதற்காக விருப்பம் உள்ள வளா்ப்பு பெற்றோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குவதற்காக விருப்பம் உள்ள வளா்ப்பு பெற்றோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழு வெளியிட்டுள்ள செய்தி: ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு வளா்ப்பு பெற்றோராக விரும்பும் குழந்தை இல்லாத தம்பதியா் விண்ணப்பிக்கலாம். வரும் டிசம்பா் 18 ஆம் தேதிக்குள் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 முதல் மாலை 4.30-க்குள் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் ஆதாா் அட்டை நகலுடன் நேரில் ஆஜராகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். முகவரி: மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழு, 21-22, கென்னட் நகா், முத்துப்பட்டி, மதுரை-3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com