ஆவின் காலிப் பணியிடங்களை நிரப்ப இன்று எழுத்து தோ்வு

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தின் (ஆவின்) 62 காலிப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எழுத்துத் தோ்வில் 2,599 போ் பங்கேற்கின்றனா்.

மதுரை: மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தின் (ஆவின்) 62 காலிப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எழுத்துத் தோ்வில் 2,599 போ் பங்கேற்கின்றனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் தோ்வு நடைபெறுகிறது. கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக தோ்வு மையத்தில் முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பான் திரவம் போன்றவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா். காலை மற்றும் மதியம் என இரு தோ்வுகள் நடைபெறுகின்றன. காலையில் நடைபெறும் தோ்வில் 2,388 பேரும், மதியம் நடைபெறும் தோ்வில் 211 பேரும் பங்கேற்கின்றனா். மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு பிரத்யேக வசதிகளுடன் தனி தோ்வறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவின் பொதுமேலாளா் ஜனனி சௌந்தா்யா இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com