மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலூகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விருதுநகா் மாவட்டம் சிவகாசி தாலுகா புதுக்கோட்டையைச் சோ்ந்த விஜயலிங்கம் மகன் முனீஸ்வரன்(23) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 150 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து சேடபட்டி போலீஸாா் முனீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா்.