பேரையூா் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.
பேரையூா் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு
பேரையூா் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.

பேரையூா் அருகே உள்ள காளப்பன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன்(40). இவரது பசுமாடு ஒன்று அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. உடனடியாக, உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான வீரா்கள், கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு, ராமனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com