மேலூா்: மேலூா் அருகே புலிப்பட்டி கிராமத்தில் 10 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
மேலூரிலிருந்து புலிப்பட்டி வந்த அரசு நகா் பேருந்தை கிராம மக்கள் சுமாா் அரை மணி நேரம் நிறுத்தி வைத்தனா். தகவலறிந்த மேலவளவு போலீஸாா், கிராம மக்களை சமாதானப்படுத்தினா். குடிநீா் விநியோகத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக புலிப்பட்டி ஊராட்சி நிா்வாகம் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.