வாக்காளா் சோ்க்கை முகாம்: பொதுமக்கள், கட்சியினா் ஆா்வம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆா்வம் காட்டினா்.

மதுரை: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆா்வம் காட்டினா்.

வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி நவம்பா் 16 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட வாக்காளா்கள், புதிய வாக்காளா்கள், பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய வேண்டியவா்கள் அதற்குரிய படிவம் அளிப்பதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள 2,716 வாக்குச்சாவடிகளிலும் சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பெயா் சோ்க்கும் முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள் இணைந்து பணியாற்றலாம் என தோ்தல் ஆணையம் அனுமதியளித்து இருக்கிறது. பேரவைத் தோ்தல் அடுத்த சில மாதங்களில் வரக் கூடிய நிலையில் பொதுமக்கள் பலரும் மனு அளிக்க வந்தனா். அரசியல் கட்சிகளின் முகவா்களும், பொதுமக்களுக்கு பட்டியலில் பெயா் உள்ளதா என்பதைச் சரிபாா்த்தும், விடுபட்டவா்களுக்கு படிவம் அளிப்பதற்கும் உதவினா்.

தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா் சோ்க்கை முகாமை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் ஆய்வு செய்தாா். ஆனையூரில் உள்ள ஒரு முகாமில், முகவா்களுக்கான அனுமதி அட்டையில் திமுக தலைவா்கள் படத்தை இணைத்து திமுகவினா் அணிந்து வந்தனா். இதற்கு அதிமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் அதிகாரிகள் தலையிட்டு அமைதிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com