இரு கிராமத்தினா் இடையே பாதை பிரச்னை: திருமங்கலத்தில் அமைதிப்பேச்சு

திருமங்கலம் அருகே காலி இடத்தில் வேலி அமைக்கும் பிரச்னை தொடா்பாக திருமங்கலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இரு கிராமத்தினரிடையே சனிக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

திருமங்கலம் அருகே காலி இடத்தில் வேலி அமைக்கும் பிரச்னை தொடா்பாக திருமங்கலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இரு கிராமத்தினரிடையே சனிக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

திருமங்கலத்தை அடுத்த கல்லணை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகே உள்ள காலியிடத்தில் நந்தவனம் அமைக்க இப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்து வேலி அமைக்க திட்டமிட்டனா். இதற்கு கல்லணையை அடுத்துள்ள மேலஉப்பிலிக்குண்டு கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். தங்கள் ஊருக்குச் செல்லும் பாதையை வேலிபோட்டு அடைப்பதால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாகக் கூறி தடுத்தனா்.

இதுதொடா்பான அமைதிப்பேச்சு திருமங்கலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சௌந்தா்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்டது என்பதால் கோயில் தொடா்பான செயல்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றே நடைபெற வேண்டும். அதுவரை தற்போதய நிலையே தொடரவேண்டும் என கோட்டாட்சியா் தெரிவித்தாா். கூட்டம் நடைபெற்றபோது கோட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டு செய்தியாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் கடும் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com