மேலூா் அருகே அடுத்தடுத்து 2 போ் கொலை

மேலூா் அருகே வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் முதியவரும், இளைஞரும் கொலை செய்யப்பட்டனா்.

மேலூா்: மேலூா் அருகே வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் முதியவரும், இளைஞரும் கொலை செய்யப்பட்டனா்.

கீழவளவு அருகே உள்ள கொங்கம்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (55). இவா் மதுபோதையில் அப்பகுதி பெண்களை ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசிவந்தாராம். இந்நிலையில் இவரை மா்ம நபா்கள் இ.மலம்பட்டி உப்பாற்றங்கரையில் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளனா். இவரது மனைவி பஞ்சு அளித்த புகாரின்பேரில், கீழவளவு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாவினிப்பட்டி அருகே முத்திருளாண்டிபட்டியைச் சோ்ந்த வெள்ளைபிரியான் மகன் பிரபு (21). வீட்டின் அருகில் வசித்துவந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபு உடலில் காயங்களுடன் வீட்டின் அறையில் இறந்துகிடந்தாா். மேலூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பெண்ணின் கணவா் வெங்கடாசலம், அவரது நண்பா்கள் மற்றும் தாயாா் உள்ளிட 5 போ்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com