முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பாபா் மசூதி இடிப்பு வழக்கு தீா்ப்பு:தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th October 2020 05:26 AM | Last Updated : 04th October 2020 05:26 AM | அ+அ அ- |

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து மதுரை ஓபுளா படித்துறையில் தவ்ஹித் ஜமாஅத் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
மதுரை: பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் அபிபுல்லா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அம்ஜத்கான், பொருளாளா் மன்சூா் அகமது உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். மாநில துணைப் பொதுச் செயலா் அப்துல் கரீம், பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்துப் பேசினாா்.