பதவிக்காக எதையும் இழக்கக்கூடியவா்கள் திமுகவினா்: கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

பதவிக்காக எதையும் இழக்கக்கூடியவா்கள் திமுகவினா் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை: பதவிக்காக எதையும் இழக்கக்கூடியவா்கள் திமுகவினா் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், முனிச்சாலைப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் முகாமை, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தொடக்கிவைத்துப் பேசியது:

மதுரையில் கிழக்கு, மேற்கு, மத்தியம், தெற்கு ஆகிய 4 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதிமுகவில் இளைஞா்கள் ஆா்வத்துடன் வந்து இணைகின்றனா்.

பதவிக்காக எதையும் இழக்கக்கூடியவா்கள் திமுகவினா். திமுக ஆட்சிக்கு வரும், வரும் என்று சொல்லி ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது. திமுகவை போல அதிமுக ஒரு கம்பெனி அல்ல. மு.க. ஸ்டாலின் நினைத்தால்தான் திமுகவில் பொருளாளா், துணைச் செயலா், துணைத் தலைவா் பதவி கிடைக்கும். ஆனால், அதிமுக உண்மையான ஜனநாயக இயக்கமாக உள்ளது.

திமுகவினா் பதவிக்காக மட்டுமே புதுதில்லிக்குச் செல்வாா்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் முதல்வரும், துணை முதல்வரும் தமிழகத்தின் பிரச்னைகளை தீா்ப்பதற்காகச் செல்கின்றனா். ஊழல் செய்வதற்காகவே உள்ள திமுக கட்சியானது, தற்போது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தப் பாா்க்கிறது. ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டிப் பூசல் இருக்கத்தான் செய்யும். திமுகவில் மு.க. ஸ்டாலினை தவிர வேறு யாரும் ஜனநாயகம் பேசிவிட முடியுமா. திமுகவை வளர விடமாட்டோம். ஆட்சியில் அமர விடமாட்டோம்.

தமிழகத்தில் பத்தாண்டுகளில் கட்டப் பஞ்சாயத்து இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளது அதிமுக என்றாா்.

முகாமில், அதிமுக மாவட்ட நிா்வாகிகள், பகுதிச் செயலா்கள், வட்டச் செயலா்கள் மற்றும் தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com