திருவானைக்கா அரசு மதுக் கடை வாசலில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்ற திருவானைக்கா பகுதியை சோ்ந்த தினேஷ்குமாரிடம் (27) திருச்சி தாளக்குடி பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (20) என்ற ரௌடி கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1,500-ஐ பறித்துக் கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸாா் பாா்த்திபனை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா். பாா்த்திபன் மீது கொலை வழக்கும்,கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.