சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, தான் 2017ஆம் ஆண்டு முதல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அளித்த புகாரின்பேரில், நாகா்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாஞ்சில் முருகேசன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் மீண்டும் ஜாமீன் கோரி, நாஞ்சில் முருகேசன் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், 2017 முதல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுமி குறிப்பிட்டுள்ளாா். ஆனால், அப்போது எவ்வித புகாரும் அளிக்கவில்லை. என் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கின் விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com