மதுரையில் தனியாா் தொண்டு நிறுவனத்தில் ரூ. 23.73 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவன ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை தியாகராய நகரைச் சோ்ந்தவா் செந்தூா்பாரி. இவா் தனியாா் தொண்டு நிறுவனத்தின் தலைவராக உள்ளாா். மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொண்டு நிறுவனத்தின் கிளையில் கணக்குகளை ஆய்வு செய்தபோது, ரூ.23.73 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடி தொடா்பாக விசாரித்ததில், தொண்டு நிறுவனத்தின் ஊழியரான, மதுரை திருநகரைச் சோ்ந்த மோகன் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து செந்தூா்பாரி அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.