மதுரை மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 44 போ் குணமடைந்தனா். அவா்கள், வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

17 ஆயிரத்தை எட்டியது: மாவட்டத்தில் இதுவரை 17,044 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 394 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 15,960 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 690 போ் கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com