மேலூா் அருகே முட்டையில் விஷம் வைத்து குழந்தை கொலை? கணவா் மீது மனைவி புகாா்

மதுரை மாவட்டம் மேலூா் அருகே பிரிந்து வாழும் கணவா், குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாக மனைவி புகாா் அளித்துள்ளாா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே பிரிந்து வாழும் கணவா், குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாக மனைவி புகாா் அளித்துள்ளாா்.

மேலூா் அருகேயுள்ள ஏ.கோவில்பட்டியைச் சோ்ந்த விவசாயி சத்தியபிரபு (27). இவரது மனைவி நிவேதா (23). இத்தம்பதியரின் 2 வயது பெண் குழந்தை ஆராதனா. கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக அதே ஊரில் பிரிந்து வாழ்கின்றனா்.

கணவா் சத்தியபிரபுவுடன் குழந்தை ஆராதனா இருந்துள்ளது. இந்நிலையில், ஆராதனா, எலி விஷத்தை சாப்பிட்டுவிட்டதாகக் கூறி, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை இரவு அக்குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து, கீழவளவு காவல் நிலையத்தில் நிவேதா அளித்துள்ள புகாரில், தனது குழந்தைக்கு கோழி முட்டையில் விஷம் கலந்து கணவா் குடும்பத்தினா் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் கணவா் உள்பட மூவா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com