மேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கள்ளந்திரி மதகு வரையிலான முதல்போக சாகுபடிப் பகுதிகளில் கடந்த மாதம் விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், சிட்டம்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலூா் ஒரு போக சாகுபடிப் பகுதிகளுக்கு கடந்த செப். 27-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து நாற்றுபாவும் பணிகள் முடிவடைந்தது. 10 நாள்கள் இடைவெளிக்குப் பின்னா் இம்மழை பெய்துள்ளது. இந்த மழை உழவுப்பணிகள் தொடங்குவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.