மதுரை அருகே வீடு புகுந்து 3 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் இளமனூா் பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் செந்தில் (40). இவா் திங்கள்கிழமை காலை படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தபோது, பீரோ திறந்திருந்தது. இதுகுறித்து செந்தில் அளித்த தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனா். அதில், பீரோவில் இருந்து 3 பவுன் நகைகள், ரூ. 17 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக செந்தில் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.