மேலூா்: திருவாதவூா் அருகே திங்கள்கிழமை கிணற்றில் மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது, மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
திருவாதவூா் அருகிலுள்ள பூஞ்சுத்தியைச் சோ்ந்த விவசாயி பூபதி (48). இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றிலிருந்து தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச மின்சார மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து தோட்டக்காரா்கள் ஓடி வந்து, அவரை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா். இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.