மதுரை அருகே குவாரியில் தவறி விழுந்த தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பாறையில் மோதி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியைச் சோ்ந்த சந்தானம் மகன் சீனிவாசன் (25). இவா் தனது தம்பி மாணிக்கவாசகம் உடன் வீட்டின் அருகே உள்ள குவாரிக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது மாணிக்கவாசகம் தவறி குவாரியில் தண்ணீரில் விழுந்துள்ளாா். அவரை காப்பாற்றுவதற்காக சீனிவாசன் குவாரியில் குதித்தபோது, பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சீனிவாசனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.