சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், சமயநல்லூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராம்குமாா் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் ராம்குமாா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.இளங்கோ தீா்ப்பளித்தாா்.