மதுரை அருகே லாரி மோதி மூதாட்டி இறந்த சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகரைச் சோ்ந்த வீரன் மனைவி முத்தம்மாள் (65). இவா் சலவைத் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, மஞ்சமலை ஆற்றுப் பகுதியில் துணிகளைச் சலவைச் செய்ய முத்தம்மாள் நடந்து சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.