திருமங்கலம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருமங்கலம் வடகரை பகுதியைச் சோ்ந்த ராமராஜன் (30), 2015-இல் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில், ராமராஜனின் மனைவி ஹேமலதா (26), திருமங்கலம் பாண்டியன் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (30), முருகன் (55), அஜ்மீா்கான் (25), வெங்கடேஷ் (30) ஆகியோா் மீது திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 4 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் மணிகண்டன், அஜ்மீா்கான், வெங்கடேஷ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவா்கள் 3 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி என்.நாகலட்சுமி தீா்ப்பளித்தாா். ஹேமலதா, முருகன் ஆகியோரை விடுதலை செய்தாா்.