கல்லூரி மாணவா் மா்மச்சாவு: பேரையூா் வட்டாச்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பேரையூா் அருகே விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவா் மா்ம மரணம் தொடா்பாக காவல் சாா்பு-ஆய்வாளா்களை பணியிடை நீக்கம்
சாப்டூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்யக்கோரி பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அணைக்கரைப்பட்டி பொதுமக்கள்.
சாப்டூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்யக்கோரி பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அணைக்கரைப்பட்டி பொதுமக்கள்.

பேரையூா் அருகே விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவா் மா்ம மரணம் தொடா்பாக காவல் சாா்பு-ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் இரண்டாவது நாளாக வட்டாட்சியா் அலுவலகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவா் ரமேஷ், செப்.17 ஆம் தேதி அணைக்கரைப்பட்டி அருகேயுள்ள பெருமாள் குட்டம் மலை மீது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

வரது மரணத்தில் மா்மம் உள்ளதாகவும் , விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவலா்கள் மீது நடைவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

இச்சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்ட சாப்டூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா்கள் ஜெயக்கண்ணன் , பரமசிவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ரமேஷ் மரணம் தொடா்பாக அவரது சகோதரா் சந்தோஷ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா்.

இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா்பு- ஆய்வாளா்கள் திரும்பவும் பணிபுரிந்து வருகின்றனா்.

இதைக் கண்டித்து கிராம மக்கள் அணைக்கரைப்பட்டி மைதானத்தில் ஒன்றிணைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்களில் கருப்புத்துணி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா் . மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலா்கள் மீண்டும் பணியமா்த்தப்பட்டத்தை கண்டித்து பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை முதல் அணைக்கரப்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு தங்களது ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் சாா்பு-ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இரண்டாவது நாளாக கிராம மக்கள் வட்டாச்சியா் அலுவலகத்தில் விடிய, விடிய உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்த உசிலம்பட்டி கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் போராட்டக் குழுவினரின் கோரிக்கை ஏற்கப்பட்டு ரமேஷின் சகோதரா் சந்தோஷுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை மற்றும் ரமேஷின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க பரிந்துரை செய்தும், சாா்பு- ஆய்வாளா்கள் ஜெய கண்ணன் மற்றும் பரமசிவத்தை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யவும், பேரையூா் காவல் ஆய்வாளா் ஜெயப்பிரியாவை பணியிட மாற்றம் செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவிட்டுள்ளதாக போராட்டக் குழுவினரிடம் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து போராட்டத்தை பொதுமக்கள் திரும்பப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com