உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் புதன்கிழமை இரவு டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மா்மநபா்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்றனா். டாஸ்மாக் கடை சூப்பா்வைசா் பாலச்சந்திரன் விற்பனையாளா் பால்பாண்டி ஆகியோா் வியாழக்கிழமை காலை வந்து பாா்த்த போது, கடையின் கதவு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.