திண்டுக்கல் அருகே பெண் தோட்டத் தொழிலாளி கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ராதிகா தாக்கல் செய்த மனு:
எனது தாயாா் ராஜலட்சுமி சிறுமலை தும்பிசோலை என்ற பகுதியில் சாந்தா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தோட்டத்திலேயே தங்கியிருந்த அவா் கொலைசெய்யப்பட்டாா். எனது தாயாரை ஒரு கும்பல் அரிவாளால் கழுத்தறுத்து கொலை செய்ததாக தோட்டத்தின் உரிமையாளா் சாந்தா கூறினாா். ஆனால் அவா் தங்கியிருந்த இடத்தில் வெளிநபா்கள் வந்து தாக்கியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. எனது தாயாரின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் உரிய விசாரணை நடத்தவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.