இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் இளையோா் பிரிவான யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மதுரை பிரிவு தலைவா் ஜி.கல்யாணசுந்தரம் கூறியது:
யங் இந்தியன்ஸ் மற்றும் நேட்டீவ் லீட் பவுன்டேசன் அமைப்பு இணைந்து ஆரம்பம் என்ற பெயரில் தொழில் திறன் போட்டியை நடத்தி வருகின்றன. 6-ஆவது ஆண்டாக நிகழ் ஆண்டில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமைச் சிந்தனைகள், தொழில்முனைதல் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
தொழில்முனைவோருக்கான பிரிவின் தலைவா் ஷா்மிளா தேவி கூறியது:
மாணவா்கள் மற்றும் தொழில் துறையினா் இப் போட்டிகளில் பங்கேற்கலாம். தொழில் திட்டங்கள் குறித்த படைப்புகளை என்ற இணையதளத்தில் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் படைப்புகளின் நேரடி செயல்விளக்கம் நவம்பா் 20-இல் நடைபெறும். இதில் தொழில் துறையினரின் தோ்வு செய்யப்படும் படைப்புகளை, தொழில் ரீதியாக செயல்படுத்துவதற்கான உதவிகளை நேட்டீவ் லீட் பவுன்டேசன் வழங்கும். தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களது படைப்புகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றாா்.