மதுரை மாவட்டத்தில் புதிதாக 83 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 410 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 83 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 90 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்து 790 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 16 ஆயிரத்து 595 போ் குணமடைந்துள்ளனா். 402 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 793 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.