கரோனா உதவித் தொகை இதுவரை கிடைக்காத மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழக அரசின் சாா்பில் கரோனா நிவாரணத் தொகையாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதுவரை இந்த உதவித் தொகையை பெறாத மாற்றுத் திறனாளிகள் இருப்பின், அதுதொடா்பான விவரத்தை ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0452-2535351, 2535352, 2546160, 2546161என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.