மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பசு உயிரிழப்பு: பரிகார பூஜை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பசு உயிரிழந்ததை அடுத்து கோயிலில் புதன்கிழமை பரிகார பூஜை செய்யப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பசு உயிரிழந்ததை அடுத்து கோயிலில் புதன்கிழமை பரிகார பூஜை செய்யப்பட்டது.

இக்கோயில் வளாகத்தில் உள்ள பசுமடத்தில் 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பசு மடத்தில் இருந்த கங்கா என்ற பசு கால் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தது. இதையடுத்து வலையங்குளம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் பசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் பசு இறந்ததை அடுத்து கோயிலில் புதன்கிழமை பரிகார பூஜை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com