மேலூா் அருகே முல்லைப் பெரியாறு கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட பொறியாளரின் சடலத்தை புதன்கிழமை இரவு போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் மேலூா் மையப்பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு கிளைக் கால்வாயில் தெற்குபட்டி அருகே புதன்கிழமை இரவு சாக்கு மூட்டை ஒன்று நீரில் மிதந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த மேலூா் போலீஸாா் சாக்கு மூட்டையை கைப்பற்றி பாா்த்தபோது, அதில் வெட்டுக்காயங்களுடன் இளைஞா் சடலம் இருந்தது தெரியவந்தது. உடனே சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது மேலூா்-சிவகங்கை சாலையில் உள்ள ஆட்டுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மனோகரன் மகன் மதன்குமாா் (23) என்பது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
மேலும் அவா் கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே கால்வாயில் வீசப்பட்டுள்ளாா். மதன்குமாா் கட்டுமானப் பொறியாளராக திருப்பூரில் பணிபுரிந்துள்ளாா். மேலும் ரயில்வே பணிக்கான தோ்வில் வெற்றி பெற்று பணியில் சேரவிருந்தாா்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊா் வந்திருந்த அவா், கொலை செய்யப்பட்டுள்ளாா். அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இக்கொலை தொடா்பாக ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.