திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் லாரி பழுதுநீக்கும் கடையில் உதிரி பாகங்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்தவா் நாகரத்தினம். கப்பலூா் சுற்றுச்சாலையில் லாரி பழுதுநீக்கும் கடை வைத்துள்ளாா். இவா் வழக்கம்போல் செவ்வாய்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டுச் சென்றாா்.
புதன்கிழமை காலையில் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடைக்குள் இருந்த லாரியின் உதிரி பாகங்கள், பழுதுநீக்கும் உபகரணங்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயிருந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.