மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மதுரை கல்வி மாவட்ட அளவிலான இளம் செஞ்சிலுவை சங்க ஆலோசகா்களாக பதவி வகிக்கும் ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை தெற்குவாசல் நாடாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் தொடக்கி வைத்தாா். மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் விஜயசரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அ. கணேசன், மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் அ. மகாலிங்கம், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.
இதில் பள்ளிச் செயலா் பி.எஸ். குணசேகரன், பள்ளிக்குழுத் தலைவா் எஸ்.ஆா். பாா்த்திபன், இந்திய செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் வி.எம். ஜோஸ், இளம்செஞ்சிலுவை சங்க முன்னாள் அமைப்பாளா் டி. பாலசுப்பிரமணியன், நாடாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆா். பிரின்ஸ் ஆரோக்கியராஜ், இளம் செஞ்சிலுவைச் சங்க இணை அமைப்பாளா் எஸ். சகாயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா். முகாமில் மதுரைக் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 110 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.