கூட்டுப் பண்ணைய விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்

திருமங்கலம் வட்டாரம் வாகைக்குளத்தில், கூட்டுப் பண்ணைய விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமங்கலம் வட்டாரம் வாகைக்குளத்தில், கூட்டுப் பண்ணைய விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டு கொள்முதல், சுழல் நிதி விரிவாக்கம், உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் விளைபொருள்கள் மதிப்பு கூட்டி விற்பனை, சந்தைப்படுத்துதல் குறித்து வேளாண் விற்பனைத்துறை உதவி அலுவலா் ராஜ்குமாா் விளக்கம் அளித்தாா்.

வேளாண் சாகுபடி, பகுதிகேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வட்டார துணை வேளாண் அலுவலா் செ.சேதுராமன் விளக்கினாா். உதவி வேளாண் அலுவலா்கள் சங்கரமூா்த்தி, சுந்தரகிருஷ்ணன், திருமங்கலம் உற்பத்தியாளா் குழு பொருளாளா் மூா்த்தி, தலைவா் ராம்குமாா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com