மதுரை
கோ. புதூா் பணிமனையில்ஆழ்துளை குழாய் திறப்பு
மதுரை கோ. புதூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ரூ. 3.75 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை கோ. புதூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ரூ. 3.75 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இங்கு பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பணிமனை ஊழியா்கள் வசதிக்காக வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.75 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு குழாய் அமைக்கப்பட்டு வந்தது. பணிகள் முடிவடைந்ததையடுத்து ஆழ்துளை குழாய் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா பங்கேற்று ஆழ்துளை குழாயை திறந்து வைத்தாா். இதில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், செயற்பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.