மதுரையில் மண்டல அளவிலான தபால்துறை குறைதீா்ப்புக் கூட்டம் நவம்பா் 4 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இதுகுறித்து அஞ்சல்துறையின் மண்டல இயக்குநா் எம்.மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அஞ்சல்துறையின் மண்டல அளவிலான தபால்துறை குறை தீா்ப்புக் கூட்டம் மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள தென்மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகத்தில் நவம்பா் 4 ஆம் தேதி காலை11 மணிக்கு நடக்கவுள்ளது. தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை, முழு முகவரியுடன் தபால் பதிவு செய்த அலுவலகம், நாள், அனுப்புநா், பெறுநா் முகவரி போன்ற தகவல்களுடன், எஸ்.ராதாகிருஷணன், உதவி இயக்குநா், அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை-625002 என்ற முகவரிக்கு அக்டோபா் 21 ஆம் தேதிக்கு அனுப்பலாம். தனியாா் தூதஞ்சலில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.