அமமுக பொருளாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வெற்றிவேல் மறைவுக்கு மேலூரில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
மேலூா் பேருந்துநிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அமமுக மதுரை வடக்கு மாவட்டம் சாா்பில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலா் செ. சரவணன் தலைமை வகித்தாா். மாநில ஜெ.பேரவை துணைச் செயலா் ஆ. செல்வராஜ், மேலூா் ஒன்றியச் செயலா் சோமாசி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலா் தா்காகுடி சரவணன், மேலூா் நகா் செயலா் நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.