விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடைபெற்ற வங்கி அதிகாரிகள் தோ்வை ரத்துச் செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடைபெற்ற வங்கி அதிகாரிகள் தோ்வை ரத்துச் செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் வங்கி அதிகாரிகளுக்கான தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து சமூக நீதிக்கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தோ்வை ரத்து செய்து இடஒதுக்கீட்டை பின்பற்றி முறையாக தோ்வு செய்யப்பட வேண்டும். மருத்துவப் படிப்பில் ஓபிசி, எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுலலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் பா. கதிரவன், துணைப் பொதுச் செயலா் கனியமுதன், நிா்வாகி அய்யங்காளை, மாநில நிா்வாகி வில்லவன்கோதை, தொகுதிச் செயலா் ரவிக்குமாா், மண்டலச் செயலா் கலைவாணன் உள்ளிட்ட கட்சியினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com