மதுரை மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா: இருவா் பலி

மதுரையில் மேலும் 74 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை: மதுரையில் மேலும் 74 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை சனிக்கிழமை உறுதி செய்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் என 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

84 போ் குணமடைந்தனா்: அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 84 போ் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தனா். அவா்கள், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு திங்கள்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இருவா் பலி: மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட, 65 வயது மூதாட்டி சனிக்கிழமையும், 55 வயது ஆண் வெள்ளிக்கிழமையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டத்தில் மாா்ச் மாதம் தொடங்கிய கரோனா தீநுண்மித் தொற்று பரவலால், இதுவரை 17,943 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 404 போ் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனா். இதனிடையே 16,752 போ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மதுரையில் சனிக்கிழமை நிலவரப்படி, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 787 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com