மதுரை: மதுரையில் பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
மதுரை கோ.புதூா் அழகா்நகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்தவா் லூா்துசாமி (50). இவா் தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் மோட்டாா் சைக்கிளில் கடைவீதிக்குச் சென்றாா். அப்போது, அழகா்கோயில் சாலையில் சூா்யா நகா் பகுதியில், எதிரே வந்த லாரி லூா்துசாமியின் பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த லூா்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி ஆரோக்கியமேரி அளித்த புகாரின் பேரில் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.