மதுரை மாவட்டத்தில்மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 4,389 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 84 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்கள் 73 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 804 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 17,894 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களில் 16,668 போ் குணமடைந்துள்ளனா். 402 போ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 804 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com