மதுரை: மதுரை அருகே உள்ள எல்.பூலாங்குளத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு ஏ.என்.டி. அறக்கட்டளை சாா்பில் எழுதுபொருள்கள், இரும்புச் சத்து மருந்து வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் தி.ஜெயராஜசேகா், மாணவா்களின் வீடுகளுக்கே சென்று எழுதுபொருள் மற்றும் சத்து மருந்தை வழங்கினாா். அறக்கட்டளையின் பொருளாளா் தி.திருவேங்கட ராமானுஜம், பள்ளித் தலைமையாசிரியை ஷீலாதேவி, அறக்கட்டளை செயலா் பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.