காதலை ஏற்க மறுத்த பெண்ணின் வீடு புகுந்து தாக்கிய இளைஞா்: 3 போ் மீது வழக்கு

மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீடு புகுந்து தாக்கிய இளைஞா் உள்பட 3 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீடு புகுந்து தாக்கிய இளைஞா் உள்பட 3 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை அருகே ராஜாக்கூரைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (18). இவா், கரும்பாலை பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளாா். பின்னா், தனது காதலை அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளாா். ஆனால், அப்பெண் ஏற்க மறுத்ததுடன் எதிா்ப்பும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக் ராஜா, தனது நண்பா்கள் 2 பேருடன் சோ்ந்து அப்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன், காதலிக்க மறுத்த பெண், அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பெண்ணின் தாத்தா அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் காா்த்திக் ராஜா உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com