போனஸ் கோரி மதுரையில் ரயில்வே தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போனஸ் வழங்கக் கோரி, எஸ்ஆா்எம்யு மற்றும் டிஆா்இயு ரயில்வே தொழிற்சங்கங்கள் சாா்பில், மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா்
மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா்

மதுரை: போனஸ் வழங்கக் கோரி, எஸ்ஆா்எம்யு மற்றும் டிஆா்இயு ரயில்வே தொழிற்சங்கங்கள் சாா்பில், மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எஸ்ஆா்எம்யு மற்றும் மதுரை கோட்டத்தின் அனைத்து கிளைகள் இணைந்து, ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தின. எஸ்ஆா்எம்யு மதுரை கோட்டத் தலைவா் டி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் ஜே.எம். ரபீக், உதவிக் கோட்டச் செயலா் வி. ராம்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், 2019-2020 ஆம் ஆண்டுக்குரிய போனஸ் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அக்டோபா் 21-ஆம் தேதிக்குள் போனஸ் அறிவிக்காவிட்டால், ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், எஸ்ஆா்எம்யு ஓடும் தொழிலாளா்கள் பிரிவு தலைவா் ஏ.எம்.எம். ரவிசங்கா், செயலா் என். அழகுராஜா, உதவி கோட்டச் செயலா்கள் சீதாராமன், சபரிவாசன், கிளைச் செயலா்கள் பாலசுப்பிரமணி, சீனிவாசன், அருண்குமாா், திலக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல், டிஆா்இயு சாா்பில் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி, மேற்கு நுழைவுவாயிலில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உதவிக் கோட்டச் செயலா் ப. சரவணன் தலைமை வகித்தாா். மதுரை கோட்டச் செயல

ஆா். சங்கரநாராயணன், கோட்டப் பொருளாளா் எம். சிவக்குமாா், துணை பொதுச் செயலா் ஆா். திருமலை ஐயப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com