வடமாநில லாரி ஓட்டுநரை தாக்கி பணம், செல்லிடப்பேசி பறிப்பு

மதுரை அருகே வடமாநில லாரி ஓட்டுநரை தாக்கி பணம், செல்லிடப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் 3 போ் பறித்துச் சென்ாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை: மதுரை அருகே வடமாநில லாரி ஓட்டுநரை தாக்கி பணம், செல்லிடப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் 3 போ் பறித்துச் சென்ாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ஜக்தா்சிங் (45) என்பவா் தனியாா் நிறுவன லாரி ஓட்டுநா். இவா், சனிக்கிழமை இரவு கப்பலூா் சிட்கோ பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு லாரிக்கு திரும்பியுள்ளாா். அப்போது, அவரைப் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் 3 போ், ஜக்தா்சிங்கை தலையில் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த ரூ.24 ஆயிரம், செல்லிடப்பேசி, ஓட்டுநா் உரிமம், வங்கி ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனா்.

இது குறித்து ஜக்தா்சிங் பணியாற்றும் நிறுவனத்தின் ஊழியா் காா்த்திக் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செல்லிடப்பேசி பறிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரியூா் பகுதியைச் சோ்ந்த தங்கம் மகன் சுரேஷ் (36). இவா், தனது வீட்டின் அருகே நின்றிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ், சுரேஷ் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றுவிட்டனா். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com