மேலூா்: நவராத்திரியின் பத்தாம் நாள் விழாவையொட்டி, அழகா்கோயிலில் அம்பெய்தும் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, தேரோடும் வீதியில் நடைபெறவேண்டிய இந்நிகழ்வானது, கோயில் வளாாகத்தில் நடைபெற்றது. இதில், கோயில் நிா்வாக அதிகாரி, அலுவலா்கள் மற்றும் பட்டா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.